Wednesday, December 26, 2007

இளைஞர் கண்ணில்

பிரிவினைகள் குவிந்த மண்ணில்
பேதங்கள் நிறைந்த மண்ணில்
நரித்தனங்கள் நடக்கும் மண்ணில்
நாளைய கனவு எண்ணி
நடைபோடும் இளைஞர் கண்ணில்
நம்பிக்கைத் துளியும் இல்லை
கடைவிரித்தக் கவிஞர் சொல்லைக்
கிஞ்சித்தும் கருத வில்லை

நாட்டினிலே நடக்கும் காட்சி
நன்றாக உற்று நோக்கல்
ஏட்டினிலே எழுதும் செய்தி
எடைபோட்டுப் பார்க்கும் பண்பும்
எள்ளலவும் அவருக் கில்லை
ஏன்தானோ தெரிய வில்லை
கள்குடித்தக் கயவர் போலேக்
கிடக்கின்றார் மயங்கி வீணே

No comments: