Wednesday, January 23, 2008

காமராசர்

விருது நகரில் பிறந்தவராம்
விடுதலைக்காக உழைத்தவராம்
உருவில் கருமை நிறத்தவராம்
உண்மையில் வெள்ளை மனத்தவராம்

நெடியத் தோற்றம் கொண்டவராம்
நேர்படப் பேசும் குணத்தவராம்
கொடிய அறியாமை இருளகற்ற
கொள்கை வகுத்து உழைத்தவராம்

மதிய உணவு அளித்தவராம்
மாணவர் கற்றிட அழைத்தவராம்
புதிய அறிவு வெளிச்சத்தை
புகுத்தி தமிழகம் காத்தவராம்

ஐந்தாண்டுத் திட்டங்கள் கண்டவராம்
அணைகள் கட்டி முடித்தவராம்
பைந்தமிழ் நாட்டை பசுமையாக்க
பாடுகள் பட்டே உழைத்தவராம்

பகுத்தறிவுப் பகலவன் பெரியாரால்
பச்சைத் தமிழரெனப் பட்டவராம்
வகுத்தப் பாதையில் வழுவாமல்
வாழ்ந்து காட்டிய காமராசர்

No comments: