Sunday, December 16, 2007

சுடுகாடாச்சே

கல்மரமாய் வயல்கள் ஆகக்
கழனிகளும் காய்ந்தேப் போக
நெல்மணிகள் விளைந்த மண்ணில்
நிழலுக்கும் மரங்கள் இன்றிப்
புல்முளைக்கா வண்ணம் பூமிப்
புழுதியாக ஆன திங்கே
புல்லினமும் விலங்கும் கூடப்
புறப்பட்டுப் போன தெங்கோ?

No comments: