Wednesday, December 26, 2007

பாரதியின் கனவுகள்

காணிநிலம் வேண்டினாய் பாரதி-இன்று
காலிமனைப் பகல்கனவு பாரதி
கவிதை உமக்குத் தொழில் பாரதி-இங்கு
கவிஞருக்குக் கனவேத் தொல்லை பாரதி

குயில்தோப்புக் கவிதைக் களம் பாரதி-இன்று
குடியிருப்பு மனைகளாச்சு பாரதி
மண்விடுதலை வேண்டினாய் பாரதி-பாரதம்
மறுகாலணியம் ஆகுதையா பாரதி

சாதி மறுத்தவன்நீ பாரதி-இன்று
சங்கங்கள் சாதிபேரால் பாரதி
பள்ளியெழுச்சிப் பாடினாய் பாரதி-தமிழர்
தாலாட்டென்று தூங்கினார் பாரதி

பெண்கல்வி வேண்டினாய் பாரதி-மகளிர்
பெண்மொழி பேசுகிறார் பாரதி
காக்கையையும் அடக்கம் செய்தாய் பாரதி-இன்று
காக்கும்கைகள் குழிபறிக்குது பாரதி

2 comments:

arunan said...

mika elimayaan kavithaigal. vaasakarudan neeridaiyaaka pesukindrana. kavignar Bala thannudaya NAAN-ai than kavithaikkul konduvanthaal kavithai melum valamurum endru ninaikkirqen.

பரிதியன்பன் said...

nandri Arunan innum nandraaga ezhudha muyarchikkiren