Sunday, December 16, 2007

நமக்கான அரசை வெல்லு

இலக்கியனார் எல்லாம் இன்று
இலக்கின்றி எங்கும் சென்று
வளர்க்கின்றார் வயிறு என்று
வசையடிகள் வழங்கல் நன்றோ?

நிலைக்கின்றப் பாடல் யாத்து
நெஞ்சினையே நேராய் வைத்துக்
கலைக்காண மதிப்பைக் கூட்டிக்
கவிஞரெலாம் வாழ்தல் வேண்டும்

அவலங்கள் கண்டும் கேட்டும்
அடுத்தவர்மேல் குறைகள் போட்டும்
தவளைபோல் இருத்தல் நன்றோ
அறிந்திடுவீர் புலவர் மக்காள்

கொடுமைகள் தீர்க்கப் பாடு
கொள்கைகள் முழங்கிக் கூவு
நடுவுநிலை நீயும் தள்ளு
நமக்காண அரசை வெல்லு

No comments: