காலம் காலமாகவே
கேட்டபோது பெய்ததில்லை
மழை
பருவகாலத்தில் மக்கள்
பூசை செய்து பயத்தோடும்
பக்தியோடும் வழிபட்டாலும்
பெய்வதில்லை
மாரியம்மன் வழிபாடும்
மழையை வேண்டிதான்
வழக்கமானது போலும்
பெய்ய ஆரம்பித்த்தால்
அடைமழையாய்
அடித்து கொட்டும்
குடிசைகள் மூழ்கி
குடியிருப்புகள் அபாய
பகுதிகளாகும்