Tuesday, April 1, 2014



தேர்தல் திருவிழா

கடைக்கோடி மனிதனும்
கண்ணுக்குத் தெரிகின்றான்
காலம் தான் மாறியதா?

இடைப்பட்ட ஐந்தாண்டு
எங்கிருந்தார் இவரென்று
எவருக்கும் தெரிகிறதா?

படைசூழ தொண்டர்கள்
பல்லிளித்து வாக்குறுதி
பாரத தேர்தல் விழா

தடையில்லா மினசாரம்
தாராள நீர் வழங்கல்
 தயங்காமல் கத்தினார்கள்

விடையென்ன தோழர்களே
விடிவில்லை நாட்டுக்கு
குடிகெடுத்தார் ஆண்டவர்கள்

ஊடகங்கள் வழியாக
உண்மைகளை மறைத்துவிட்டு
நாடகங்கள் நடக்குதிங்ஙே

மதம்பிடித்த பேயொன்று
விதவிமாய் பொய்யவிழ்த்து
மோடி வித்தைக் காட்டுதிங்கே

தாயென்று சொல்லிக்கொண்டு
தறுதலை நாயொன்று
தப்பாட்டம் ஆடுதிங்கே

ஒட்டுமொத்த தமிழர்களின்
ஒரே தலைமையென்று
ஓநாயும் பாடுதிங்கே

நாக்கைக் கடித்துக் கொண்டு
நன்றாக்க் குடித்து ஒன்று
நாடகங்கள் ஆடுதிங்கே

தமிழ்த் தேசியம் பேசி
தமிழ்நாட்டில் திரிந்ததெல்லாம்
தடாலடியாய் விழுந்த்திங்கே

கப்பலிலே பணம் வருது
காருகளில் நகை வருது
அப்பப்பா தாங்கவில்லை

கூரையேறி கோழி பிடிக்கா
கூட்டமோ கோட்டையேற
கோலாட்டம் ஆடுதிங்கே

விடுதலை நாள்முதலாய்
வேட்டையிட்ட கூட்டமின்று
நாட்டைக் காப்போம் என்கிறது

விழாக்கால சலுகைக்கும்
விருந்துக்கும் மதுவுக்கும்
விற்காதீர் உங்கள் வாக்கை

அவமான சின்னங்களை
ஆதரித்து நிற்காதீர்
மண்மானம் காக்க வாரீர்

சிந்தித்து வாக்களிப்பீர்
குடியரசை நிலைக்க வைப்பீர்