Thursday, December 13, 2007

அன்பெனும் மழையினிலே

அன்பெனும் மழையினிலே
அனைவரும் நனைந்திடுவோம்
வன்மங்கள் மறந்திடுவோம்
வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்

என்புகள் தோலுமான
யாக்கையும் நிலையல்ல
பண்புகள் பண்பாடுகள்
பாதுகாத்துப் போற்றிடுவோம்

சொந்தங்கள் மட்டுமின்றி
சூழும் சமூகத்தினை
சொந்தமாய் நினைத்திடுவோம்
சொர்க்கமாகும் வாழ்க்கையுமே

மண்தரை சேரும்நீராய்
ஒன்றியே வாழந்திடுவோம்
விண்வரை வளரும்புகழ்
வீரமே அன்புதானே

No comments: