Saturday, December 15, 2007

ஆறு எழுந்தால்....

ஆறு எழுந்தால் அருவி யாகும்
அடிமை எழுந்தால் ஆட்சி மாறும்
சேறு வறண்டால் செந்நெல் மறையும்
சாதி மறைந்தால் சமத்துவம் விளையும்

நாறு சேர்ந்தால் மலர் மாலையாகும்
நன்றி மறந்தால் நிலமை தாழும்
வீறு குறைந்தால் கவிதை வீழும்
வேரைத் தொழுதால் வெற்றிக் குவியும்

போரை மறந்தால் புத்தம் தழைக்கும்
புவியைக் காத்தால் சந்ததி வாழ்த்தும்
நீரைச் சேர்த்தால் நிலவும் பசுமை
நிறைவாய்க் கற்றால் நீங்கும் கீழ்மை

No comments: