Thursday, May 20, 2021

சனாதனம்

மூடி வைத்து
கழுத்தறுத்தான்
ஒரு
முழு சனாதனி
அரைநிர்வாண
பக்கிரி

பரங்கியரிடம் பெற்ற
உரிமையை
ஒரு பனியா உயிருக்காக
பலகோடி
ஆதிக்குடிகளின் உயிர்களை
அடகு வைத்தோம்

அரும்பாடுபட்டு
செதுக்கி வைத்த
சாசனமும்
கேள்விக்குறியாகும்
பாசிசத்தின் பிடியில்

மீட்டெடுக்க
ஒரு மீட்பர் இருக்க
கைகளை சேர்த்து
களமாடுவோம்
அதிகாரம் அவசியம்
விடுதலை நிச்சயம்

அதிரும் பறை
நாரவாயண்களை
அச்சமூட்டுகிறது
நீதிமனுவை
மொழிபெயர்த்து
கொடுத்தால்
குட்டு
வெளியாகிவிடுமென்று
ட்வீட்டுகிறார்கள்

அசலை
தடைசெய்யாமல்
பெயர்ப்பை
வெளியிடக்கூடாதென
பொதுவெளியில்
கோஷமிடுகிறார்கள்

அம்பேத்கர் திடலும்
பெரியார் திடலும்
அசோகர் தூணும்
அவர்களுக்கு
வயிற்றில்
முச்சூடும்
புளியை கரைக்கின்றன .




No comments: