Thursday, May 20, 2021

சமூக (அ)நீதி

கொன்று குவிக்கிறது 
கொரோணா
கூடாதே என்றாலும்
கட்டுப்படாமல் அலைகிறார்கள்
சாலைகளில் கறிக்கும் ,மீனுக்கும்

டாஸ்மாக் கடைகளில்
முண்டியடித்துக்கொண்டு்
காசில்லாமல்
கொரோணாவை வாங்கி
வருகிறார்கள்

இந்த நிமிடம் மட்டுமே நிஜம்
நாளைக்கு உத்திரவாதமில்லையென
நன்றாக
உலகுக்கு உணர்த்தியிருக்கிறது கொரோணா

ஆனால்
பேண்ட சாதிகள்
சேரியில்
திருவிழா நடத்தியதை எதிர்த்து
கட்டப்பஞ்சாயத்து பேசி
காலில்விழ வைத்து
தங்கள் சாதித்திமிரை
நிலைநாட்டத் துடிக்கிறார்கள்

காலில் விழவைத்தவர்களை
கைதுசெய்யாமல்
பாதிக்கப்பட்டவர்களின் மீது
வழக்குப் பதிகிறது
சனாதன காவல்துறை
சமூகநீதி பேசும்
பெரியார் மண்ணில்

கேட்பதற்கு நாதியில்லாமல்
கேவலங்கள் தொடர்கிறது
சுயமரியாதை இல்லாதவர்களால்
இந்த அவலங்கள்
வேடிக்கைப் பார்க்கப்படுகிறது

உலகமே ஒன்று சேர அழைத்தாலும்
மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு என்றாலும்
சகமனிதரை இழிவு செய்யும்
சாத்தன்களை கண்டும்
காணாமல் போவதுதான்
சமூகநீதியா ?

ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை


No comments: