Thursday, May 20, 2021

உழைக்கும் மகளிர்

விழிப்பு வந்து 

கால்போன போக்கில்
பயணம்
தொடர்கிறேன்
தன்வீட்டின்
வாயிலில் கூட தண்ணீர்
தெளிக்க முடியாமல்
ஏ. சியில் தூங்குபவர்களுக்காக
ஒரு வாளியும்
துடைப்பமுமாக
செல்கிறாள்
வெத்தலையை மென்ற படி
ஆண்டாளு அத்தை .
அவள் சென்றாள்தான்
பல வீடுகளுக்கு
குளிர்ச்சியும் சுத்தமும்
வரவேண்டும்
இரவெல்லாம்
காவல் காத்த நாய்கள்
அசந்து தூங்குகின்றன
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
ஆட்கள் நடமாட
மெயின் ரோடு வந்துவிடுகிறது
அங்கே
நாயர் கடையில்
இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுகிறது .
சைக்கிள் ரிக்‌ஷா நாயகர்கள்
பஸ் டிரைவர் கண்டக்டர்
என
களைகட்டுகிறது டீக்கடை






No comments: