Thursday, May 20, 2021

கொரோணா

 பூமிக்கோளம் முழுவதுமே 

புதிய வைரஸ் தொற்றுகள் 

சாமியில்லை காப்பாற்ற 

சரிந்து சாகும் மனிதர்கள் 

கோடி கோடி பணமிருந்தும் 

கோலம் அளக்கும் அறிவிருந்தும் 

கோரைப்புள்ளை போன்ற வைரஸ் 

கொடுக்கும் தொல்லை தாங்கல 

தனிமை சிறையில் அனைவரும் 

தவிக்கும் மக்கள் சாலையில். 

இனிமை இல்லை வாழ்க்கையென்ற

உண்மை புரியும் நாளிது 

முககவசம் அணிவதற்கும் 

முகம் சுளிக்கும் மனிதர்கள் 

கைகழுவச் சொல்லியும் 

காற்றில் விட்ட கழுதைகள் 

இடைவெளியே விடாமல் 

இடத்தில  கூடும் மந்தைகள் 

கொத்துக் கொத்தாய் நோய்த்தொற்றில்

கூடி சாகும் அவலங்கள் 

ஆஸ்பிட்டலில் இடமில்லை 

ஆம்புலன்சும் கிடைக்கல 

ஆக்சிஜனுக்கும் வழியில்லை 

அந்தோ மக்கள் வீதியில் 

அரசு என்ன செய்திடும் 

அறிவு வேண்டாமா மக்களே 

அவரவர் உயிரைக் காத்தல் 

அவரவரே பொறுப்படா

அலட்சியங்கள் இல்லாமல் 

அடங்கிக் கிடப்பீர் வீட்டிலே 

முககவசம் அணிந்து நீங்கள் 

முழு உயிரைக் காப்பீரே

இடைவெளியை விட்டு நின்று 

எட்ட ஓட்டுவீர் கொரோணாவை 

கைகளையே கழுவி கழுவி 

கருவறுப்பீர் கொரோணாவை 

கிருமி நாசனி பயன்படுத்தி 

கிழித்தெரிவீர் கொரோணாவை 

விளையாட்டாய் இல்லாமல் 

விழிப்போடு இருந்திடுவோம் 






No comments: