Thursday, October 8, 2009

குருவி


காகத்திடம் அடிபட்டு

வந்தது ஒரு சிறு குருவி.

அதற்கு இணைத் தேடி

சேர்த்தோம்.

கூடவே

இன்னும் இரண்டு குருவிகள்

சேர்ந்து கொண்டன.

ஒரு நாள் காலை

அனைத்து குருவிகளின்

கால்களிலும் குருதி.

விளங்கவில்லை காரணம்.

குழந்தை மிகவும் வருந்தினாள்.

இரண்டு நாள் கழித்து

ஒரு குருவி

இறந்து போனது.

மனது வலித்தது.

குழந்தை யாழினி

சொல்லிக்கொண்டே இருந்தாள்.

கூட்டுக்குள் அடைப்பதை

விரும்பாத எனக்கு

குற்ற உணர்வு.

2 comments:

Thenammai Lakshmanan said...

//கூட்டுக்குள் அடைப்பதை
விரும்பாத எனக்கு
குற்ற உணர்வு.//


பாலா அற்புதம் உங்கள் மனவலி எனக்குப் புரிகிறது

பரிதியன்பன் said...

வலியை உணரும் மென்மையானம் தான் கவிதை படைக்கும்
நன்றி தேனம்மை