Friday, September 4, 2009

அழுகை


ஒருத்தன் செத்தா நாடழுது

வருத்தப் பட்டு வாய் பிளக்குது

கருத்துச் சொல்லி கவலைப் படுது

திருந்துவாயா தமிழா?-இனிமேல்

வருந்துவாயா தமிழா?


விபத்துல செத்தாக் கூட

அபத்தமாக பழியைப் போட்டு

இந்தியாவே அழுது புலம்புது

சிந்திக்க மறந்தாயே தமிழா?-இப்படி

எந்திரமாய் ஆனாயே தமிழா


தமிழ்நாட்டுத் தலைவரெல்லாம்

தமிழ்மக்கள் கொலை மறந்து

தம்கட்சி கொடி இறக்கி அழுதார்

தாங்கியே பார்த்தாயே தமிழா-ஏன்

ஓங்கி நீ எதிர்க்கவில்லை தமிழா?


எந்தயினம் செத்தாலும்

இந்தியனாய் நீயழுவாய்

உந்தன் இனம் செத்தபோது -ஒப்புக்கும்

ஒருநாய் கூட அழவில்லை தமிழா

உணராமல் போனாயே தமிழா


கொத்துக் கொத்தாச் செத்தாலும்

கொலை கொலையாய் சாஞ்சாலும்

ஒத்துக்க மாட்டானே உயிராய்-உன்னை

எத்திடுவான் இந்தியன் மயிராய்-நீயும்

எப்போது புரிந்திடுவாய் தமிழா?


ஓனத்துக்கு விடுப்பளிப்பான்

ஓர்தேசக் கதையளப்பான்

ஆனமட்டும் நமக்கெதிராய்

ஆட்சி செய்யும் தலைவர்களை

அடையாளம் கண்டிடுவாய் தமிழா?


நாடு போற போக்குள

நம்ம போக்கு நல்லா இல்ல

வீடு சொத்து போதுமே தமிழா

ஆடு மாடா இல்லாம

ஆறு அறிவை பயன்படுத்து தமிழா




2 comments:

புதுவைப்பிரபா said...

உணர்வு மிக்க கவிதை வரிகள். . .பாராட்டுக்கள் நண்பரே
புதுவைப் பிரபா

பரிதியன்பன் said...

நன்றி
பிரபா