Friday, October 24, 2008

ஒலிப்பான்

வாகன ஓட்டிகள்
காதுகளற்ற ஜீவன்கள்
எப்போதும்

ஒலிப்பான்களில்
கை வைத்துக்கொண்டே
பயணம்

இயந்திரங்களின்
இரைச்சலோடு
ஒலிப்பான்களும்

காதுகளைக் கிழிக்கும்
ஒலியோடு கண்மூடி
ஓட்டம்

அலரும் சத்தத்தில்
ஆடிப்போகும் உடல்
அசுரத் தழுவல்

காதுகளைத் துளைத்து
மூலையை கசக்கி
நரம்புகளை அழுத்தும்

எரிச்சலில் எல்லாம்
இழந்த வெருப்பு
ஏறும் குருதி அழுத்தம்

வண்டிகளைப் பார்த்தாலே
வருவது எமனோ என
நெஞ்சம் குமுரும்

பேரிரைச்சல் புத்தியை
பேதலிக்க வைத்து
பேச்சை நிறுத்தும்

கழத்து வலிக்க
காதுகள் கிழிய
கண்களை மறைக்கும்

ஒலிப்பான்கள்
உயிர் குடிக்கும்
கருவிகளாய்

No comments: