Sunday, October 19, 2008

மனிதம்

இடம் பிடிக்கும் ஆசையில்
இரத்த வெள்ளத்தில்
யாருமற்று.
உலகத்தின்
எல்லா பக்கங்களிலும்
கலகத்தின் சுவடுகள்.
ஈராக்கில்
இனப்படுகொலை
ஈவு இரக்கமின்றி.
தன் குடிமகன்
கொல்லப்பட்டால்
தவிக்கும் மேலைநாட்டவர்.
சொந்த மக்களை
அகதிகளாக்கும்
இலங்கை பேரினவாதம்.
தன் நாட்டு
மீனவர்களையே
தமிழர்களாய் பார்க்கும் இந்தியா.
இந்தியப் பெருங்கடலை
வல்லாண்மை செய்ய ஆயுதம்
வழங்கும் இந்தியா
உலக அமைதியை
உரக்க பேசியே
உயிரைக் குடிக்கும் அமெரிக்கா.
தமிழர் கறி கேட்கும்
தென்னிலங்கை
பௌத்தம்.
சதை பிய்த்து
குருதி குடித்து
சந்தியில் மனிதம்.
ஆளுக்காள் அரசியல்
பண்ண இடந்தரும்
அட்சயபாத்திரம் மனிதம்.

2 comments:

Kirubakar said...

/*
சதை பிய்த்து
குருதி குடித்து
சந்தியில் மனிதம்.
ஆளுக்காள் அரசியல்
பண்ண இடந்தரும்
அட்சயபாத்திரம் மனிதம்.
*/

Saattaiyadi thamila...

Kirubakar said...

mudindhaal idhaiyum paarungal..

www.kirubaas.blogspot.com.