Sunday, October 19, 2008

பேச்சு

பார்க்கும் இடமெல்லாம்
பரபரப்பாய் பலவிதப்
பேச்சுக்கள்.
யார்க்கும் புரியாமல்
எதையோ நீட்டி முழக்கி
எறியப்படும் சொற்கள்.
வேர்க்க விருவிருக்க
கேட்பவர் வேதனையில்
துடிக்க பேருரைகள்.
மேடை விட்டிறங்கியதும்
மேல் துண்டாய் தூக்கி
எறியப்படும் கொள்கைகள்.
காற்றில்
காணாமல் போன
வாக்குறுதிகள்.
நாக்கு வங்கியின்
வாக்கு மட்டுமே
மூலதனம்.
சீக்கு சொற்களால்
சீழ் பிடித்துப் போன
செவ்வாய்.
நீக்கு போக்குகள்
நித்தமும் தேடும்
நிதர்சணம்
மேலும் கீழும்
மேனி அசைந்து
வாழும் கலை.


2 comments:

Kirubakar said...

/*
நாக்கு வங்கியின்
வாக்கு மட்டுமே
மூலதனம்.
சீக்கு சொற்களால்
சீழ் பிடித்துப் போன
செவ்வாய்.
நீக்கு போக்குகள்
நித்தமும் தேடும்
நிதர்சணம்
*/ Arumai...

பரிதியன்பன் said...

என் எழுத்தை வாசித்து மறுமொழி அளித்து பாராட்டியமைக்கு
நன்றி கிருபா