Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி இனி
பொல்லாட்சி
ஆணுக்கு ஒழுக்கத்தை அளிக்காத பெற்றோர்கள்
ஆயுளுக்கும் வருந்த வேண்டும்
தான்தோன்றித் தனமாக தப்புசெய்யும் இளைஞர்தம்
ஆணுறுப்பை அறுக்க வேண்டும்
ஊணுக்கும் உயிருக்கும் உத்திரவாதமில்லாத
ஊரையே கொளுத்த வேண்டும்
உன்னதப் பிறவியாம் பெண்களை மதிக்காத
உலகத்தை எரிக்க வேண்டும்
பார்வையால் கற்பழிக்கும் படுபாவி பேர்களை
ஏர்பூட்டி உழவும் வேண்டும்
நேர்பட பேசிடும் எதிர்த்திடும் நெஞ்சுரம்
நேரிழை பெறவும் வேண்டும்
வளம்சூழ் பொள்ளாச்சி மகாலிங்கம் சிற்பியால்
வரலாற்றில் பெருமை சூழ
வன்புணர்வு நாய்களால் வந்ததே கலங்கமும்
பொள்ளாச்சி பொல்லாட்சியாச்சே !
பொறிவைக்கும் காமுகர் புரிந்திடும் பக்குவம்
பெறவேண்டும் தங்கைமாரே!
பெரியோர் போர்வையில் பேடிகள் வருவார்கள்
அறிந்திடுக எந்தன் மகளே !
அன்பென்று விஷம் கக்கும் ஆண்களை
இனங்கண்டு
அகற்றிடு நட்பைவிட்டு
ஆருக்கும் அஞ்சாது அடங்கிநீ துஞ்சாது
அறுத்தெரி அவனின் உறுப்பை
போருக்கும் சலைக்காத வீரமகள் நீஏன்
வீணருக்கு இரையாகிறாய் ?
நாருறிக்கும் விதமாக நங்கையே உரித்தெறி
நாட்டிலே அச்சம் தோன்றும்!
தாய்வழி சமூகத்தின் மரபணு தொடர்ச்சியே
நாய்களை வெட்டி வீழ்த்து!
வாயிலே பல்லும் வலிய நகங்களும் தற்காப்பு கருவிதானே !
கோயிலாய் இருந்தாலும் கோரமாய் வன்புனரும்
கோழைகளை எதிர்த்து தாக்கு !
பெண்ணென்றால் மட்டமாய் தின்றிடும்
பண்டமாய்
பார்த்திடும் ஆண்கள் வீழ்த்து !
மண்ணிலே காதலை புதைத்திட துடிப்பவர்
கண்ணிலே ஈயம் பாய்ச்சு
நம்பி பழகிடும் நங்கையர் சீரழிக்கும்
நாய்களை கொல்ல வேண்டும்
தம்பியாய் அண்ணனாய் தகப்பனாய்
இல்லாத
தறுதலைகள் அழிக்க வேண்டும்
இனியொரு பெண்ணுக்கு இப்படி நேராமல்
இறுதி தீர்ப்பு எழுதவேண்டும் !








No comments: