Sunday, May 20, 2018

சுமைதாங்கி

சுமைதாங்கி
மசூதி இடிப்பதற்கு
காவிகளின் கரசேவை
தாஜ்மகலை காப்பாற்ற 
தளிரே உன் கரசேவையோ?
இடித்தாலும் இடிப்பான்
 இந்த இந்துத்வா கூட்டமென்றா
இளமொட்டே கல்சுமந்தாய்
வயிற்றுக்கு
 உணவில்லை
வலியோடு உழைக்கின்றாய் 
பயிற்றுவிக்க வக்கில்லை
பாரதத்தாய் நாணுகிறாள்
சும்மாடு தலைவைத்து
சுமைதாங்கி ஆனாயே?
அம்மாடி உன்னுழைப்பில்
அடுப்பெரித்து
உன் வயிறு பிழை்க்கிறது
ஊர்வயிறு எரித்துத்தான்
 பலர் தொப்பை பெருக்கிறது
நீபடித்து உயரும்நாள் தான் 
பாரதத்தின் விடுதலைநாள்
நீட்டென்னும் நீசனால் 
நிம்மதி போனதிங்கே
போட்டித் தேர்வுகளால்
போராட்ட வாழ்க்கையிங்கே
ஏட்டில் எழுதவொண்ணா
எத்தனையோ கொடுமையம்மா
அத்தனைக்கும் ஒரேவழி
அரும்பே கல்விதான்

(தலையில் கல் சுமந்திருக்கும் சிறுமி படத்துக்கு எழுதிய கவிதை)

No comments: