Sunday, May 20, 2018

மழை

மழை
ஓய்வெடுத்து ஓய்வெடுத்து 
பெய்கிறது.
அடுத்து 
பெய்யாது என 
நினைக்கும்போது 
வெளுத்து வாங்குகிறது
இரவு பணிக்கு 
செல்லும் காவலாளி போல
பகலில கொஞ்சம் கொஞ்சம்
நேரம். தூங்கி
இரவு முழுதும் 
விழித்துக்கொண்டு 
கொட்டித்தீர்க்கிறது
எதையும் 
மழையை நம்பி திட்டமிடவும்
நம்பாமல். இருக்கவும் 
முடியவில்லை
மழை மழையாகவே இருக்கிறது
நாம் தான் நாமாக இல்லை


No comments: