Sunday, May 20, 2018

வரியாட்சி

வரியாட்சி
பாலைவனக் கப்பல்போல 
பாவிமனம் போகுதடா
பாதையெல்லாம் மணற்குவியல்
பருகத்துளி நீருமின்றி
காலையில்  கண்விழிச்சா  
கட்டாயம் அறிவுப்பொன்று
கலக்குதடா வயிற்றில் புளி
கையிருக்கும் காசு காணாமல் போய்விடுமோ?
கட்டாயம் சுவாசிக்க வரி கவர்மெண்டு போட்டிடுமோ?
இணையர் பேசிடவும் இணையர் வரி வந்திடுமோ?
இன்றுமுதல் உந்தன் பேர் இதுதான் என்று கூறிடுமோ?
இரவெல்லாம் இதேநினைப்பில்
இயல்புநிலை இல்லையடா?
நீர்நிலைகள் அத்தனையும் 
நிரந்தரமாய் அழிந்ததடா
நீர்வானம் பொழிந்தாலும் 
நிந்தனையே மிஞ்சுதடா?
போர்க்கோல வாழ்க்கையிலே  
பொல்லாப்பு சேருதடா
நீர்க்கோலம் அத்தனையும்
பாலைவனம் ஆகுதடா
ஆர்வந்து  காப்பற்றயிந்த
அகிலமும் பிழைக்குமடா?

No comments: