Friday, February 26, 2010

தலையும் கொடுப்பேன்

வயிறே எனக்கு வாழ்க்கையில்லை
வாழும் தமிழே என்விருப்பம்
உயிரும் தருவேன் தாய்தமிழ்க்காய்
உலகும் எதிர்ப்பேன் தமிழ்மொழிக்காய்
கயிறே என்னைக் கவ்விடினும்
கலங்க மாட்டேன் தலைகொடுப்பேன்
துயரை மறந்து தூயதமிழ்
துலங்கிட நானும் தொண்டுசெய்வேன்

தாயும் தந்தையும் தவழ்ந்தமண்ணில்
வேறி னத்தான் வேறூண்ற
நாயாய் காலை நக்கியவன்
நம்பிக்கைப் பெற்று இருப்பேனா?
பாயும் புலியாய் பகைமுடிப்பேன்
பைந்தமிழ் வீரம் காத்துநிற்பேன்
நோயாம் அயல்மொழி மோகத்தை
நொடியில் விரைந்து அழித்தொழிப்பேன்

வாழும் வரைக்கும் வளர்தமிழின்
வளர்ச்சிக் காகக் கைகொடுப்பேன்
சூழும் பகையைச் சுட்டெரித்து
சுடர்விட தமிழ்மொழிக் காத்திடுவேன்
வீழ்ந்த தமிழர் வீரமண்ணை
விரைவில் மீட்டு விடுதலைப்பண்
ஈழ மண்ணில் இசைத்திடுவேன்
இயலும் வரையில் ஓயமாட்டேன்

2 comments:

புதுவைப்பிரபா said...

வாழ்க தமிழ். .
வளர்க பாலா. .

தோழமையுடன்
புதுவைப் பிரபா

பரிதியன்பன் said...

நன்றி பிரபா