Tuesday, September 1, 2009

பாரதம்


ஏ பாரதமே

உன்னைச் சுற்றிய

சிறிய நாடுகளை

மேலாதிக்கம் செய்யவே

ஓடிச் சென்று உதவிடுவாய்.

அறிந்த அவைகளும்

அச்ச உணர்வோடு

பெற்றுக்கொண்டு எட்டி நிற்கும்.

இப்படித்தான்

இலங்கைக்கும்

அழையா விருந்தாளியாய்

அள்ளிக்கொடுத்தாய் ஆயுதங்களை.


அமெரிக்காவும் சீனாவும்

அமைத்திடும் படைத்தளம்

என்ற

அச்சமே எப்போதும்.


உன்

அச்சம் வீண் போகவில்லை

சீனாவின்

வணிக கடற்தளம்

படைத்தளமாவது

வெகுதொலைவிலில்லை


ஈழத் தமிழர்களை

ஈவிரக்கமில்லாமல் கொண்றவர்கள்

நீ

பகையெனக் கருதும்

பாகிஸ்தானோடும்

கை கோர்த்துக் கொண்டு

உன்

பாதுகாப்புக்கே வேட்டு வைக்க

தயாராகிறார்கள்.


ஈழப் படுகொலைக்கு

இந்தியாவே

என்றாவது ஒருநாள்

வரலாற்றில்

மன்னிப்புக் கோருவாய்

தமிழீழம்

தனிக் கொடி படையோடு

அதை சாதிக்கும்.

வல்லரசு கனவு

பகல் கனவு.

No comments: