Tuesday, April 7, 2009

ஏன்

எதையோ எழுதத் துடிக்கிறேன்
என் பேனா என்னையும் அறியாமல்
என்
கை விரல்களின் துணையோடு
கண்டதையும் களமிறக்கிச் செல்கிறது
நான்
என்செய்வது
மூளையும் புலன்களும்
முட்டிக்கொள்ளாதவரை
நல்லபடிதான்
எல்லாம் நடக்கின்றன.
வெவ்வேறு திசைகளில்
எண்ணங்கள்
விரியும் வேளையில்
இவ்வாறு நடக்குமா
எனும்
கேள்விகளே
மிஞ்சுகின்றன.

No comments: