Saturday, January 7, 2012

தானே............

2011 ஆம் ஆண்டின்
கடைசி நாட்களை நினைத்தால்
கண்ணீர் தான் காட்சியாகிறது.

பிறக்கும் புத்தாண்டை
வரவேற்க காத்திருந்தவர்களுக்கு
வருடும் தென்றலிடமிருந்து
வந்தது பேரிரைச்சல்

ஓலமிட்டு
ஓங்கி வளர்ந்த மரங்களையெல்லாம்
ஒரு கைப் பார்த்து
கூளமென கூட்டிச் சுருட்டி
குதறித் தள்ளியது.

இடுப்பொடிந்த
மின்கம்பங்கள்

இலை,கிளை மட்டுமா?
தலை அடியென
தங்களை இழந்த தாவரங்கள்

ஆள்வைத்து வெட்டினாலும்
அப்படித் துண்டாட முடியுமாவென
அதிர்ச்சிக் குள்ளாக்கும்
அழிந்த தென்னந்தோப்பு

நூற்றாண்டு கண்ட மரங்களும்
நொடியினில் அழிந்தன
கூற்றென தானே வந்த
தானே புயலால்

அடர்ந்த மரங்களில்
தொடர்ந்து உறங்கிய
அனைத்து பறவைகளும்
அடியோடு மாண்டன

புதுவைக் கடற்கரைச் சாலை
கல்வீசித் தாக்கப்பட்டு
கோமாவில் கிடந்தது

வீதிகள் தோரும்
நாதியற்ற பிணம் போல
நடுத்தெருவில் கிடந்தன
ஊதி எறியப்பட்ட
உயிரற்ற பொருளனைத்தும்.

ஊடகங்கள் செயலிழந்து
உறவுகளும் தொடர்பிழந்து
ஆடு மாடு கோழியெல்லாம்
ஆவியடித்தது போல்
அகால மரணத்தில்.

காற்றுக்கேன் இந்தப் பகை?
கூற்றுக்கேன் இந்த வேடம்?

No comments: