Saturday, April 10, 2010

மகளிர் இட ஒதுக்கீடு

உன்னில் பாதி பெண்மையடா
ஒதுக்கல் என்ன நீதியடா
எண்ணம் முழுதும் ஆதிக்கம்
ஏய்த்தாய் பெண்ணைப் போதுமடா
என்னக் கொடுமை ஆடவரே
இன்னும் மசோதாக் கலந்தாய்வு -ஒருக்
கண்ணில் வெண்ணெய் சுண்ணாம்பு
கதையாய் இன்னும் தொடருவதா?

சரிபாதி உரிமை உடையவளை
சனாதனம் பேசி ஒடுக்குவதா?
மரியாதை தானா மகளிரையே
மட்டம் தட்டிப் பேசுவது
உரிய இடத்தை மகளிருக்கு
உடனே வழங்கல் கடமையடா
சரியாய் சொல்வீர் பெண்ணுரிமை
இனாமா? இல்லை வாழ்வுரிமை

அச்சம் நாணம் தூக்கியெறி
அடிமைத் தளையை உடைத்தெறி
மிச்சம் மீதி உண்ணல் ஒழி
மீட்டு உரிமை நாட்டிவிடு
அச்சன் கணவன் வல்லாண்மை
அடங்க மறுத்து அத்துமீறு
பிச்சைய யல்ல ஒதுக்கீடு
பெண்ணே எதற்கு கூப்பாடு?

கொடையாய் மென்மை பெற்றவளே
கொடுமை எதிர்க்க வா வெளியே
நடையில் அன்னம் ஆனாலும்
நாட்டு உனது பிறப்புரிமை

No comments: