Thursday, January 9, 2020


அமைதியாய் உறங்கிய
ஆளில்லாத தோப்பில்
அலையடித்தது போலொரு
அச்ச பேரொலி
ஆழ்ந்த நித்திரையில் இருந்த
ஆலமரம்
ஆதவனின் ஒளிக்கீற்றுகளால்
சோம்பல் முறித்தது
ஒவ்வொரு பறவையாக
கடமை உணர்வோடு
காலி செய்யத் தொடங்கின
தத்தம் இருப்பை.
எறும்புகள்
உணவுக் கடத்தலை தொடங்கின
காக்கைகள் உறவை அழைத்தன
எங்கிருந்தோ வந்த
பாங்கு ஒலி
நேரத்தை சொல்லி
நித்திரை கலைத்தது.





No comments: