Sunday, August 22, 2010

மாற்றிக் காட்டுவோம்

மாற்றம் என்பதே மாறாத் தத்துவம்
மார்க்சிய அறிஞரின் மந்திர வாசகம்
ஏற்றம் பெற்றிட ஏழைகள் வாழ்வில்
ஏற்றுவோம் உரிமை விளக்கினை நாளும்
கூற்றுவன் நினைத்து குலைந்துப் போகாமல்
வேற்றுமைகள் போற்றி பிரிந்து நிற்காமல்
மாற்றிக் காட்டிட மானுட சமுத்திரம்
போற்றிக் காத்திட புறப்படுத் தோழனே

கேடுகள் சூழ்ந்தக் கீழ்மை உலகினைக்
கிளர்ச்சி செய்தே கீழ்மேல் புறட்டி
மேடுகள் பள்ளம் ஓர்மை யாக்கி
மேதினி எங்கும் பொதுமைப் புகுத்திக்
கோடுகள் அற்றக் கோளப் படத்தினைப்
கொண்டே உலகில் குடிகள் வாழ்ந்திட
பீடுடை பொதுமை உலகினை நாமும்
படைப்போம் வாரீர் பாரை நன்றாய்

No comments: