பெரிய தேசமாய்
பேரெடுக்கவே
அட்டகாசம்
வளர்ச்சிக்குப் பதில்
வீக்கமே
பெருமைக் கொள்ளப்படுகிறது
கல்வி
சுகாதாரம்
வியாபாரம்.
ஆனாலும்
ஒரே நாடாய் இருக்க
அழுத்தங்கள்
மண்ணின் மைந்தருக்கு
மறுக்கப்படும்
உரிமைகள்
விழிப்புற்றுத்
தன்னுரிமைக் கோரினால்
தாங்காத சினம்
தெலுங்கானா உதயம்
தேசத்துக்கும் பெருமை
தெலுங்கருக்கும் நன்மை
தேசிய இனங்களின்
தன்னாட்சியே
மாசிலாத மக்களாட்சி
வீட்டுக் குழந்தைகள்
பட்டினியால் சாக
வீதியில் ஏனடா சமபந்தி?

Monday, December 14, 2009
Monday, December 7, 2009
Wednesday, December 2, 2009
முண்டம்
அருணாச்சலத்தில்
அண்டை சீனாவின்
அத்துமீறல்.
வங்கதேச எல்லையில்
வழியற்ற மக்களின்
ஊடுறுவல்.
வடகிழக் கெங்கிலும்
வந்தேரிகளின்
அட்டகாசம்
பாகிஸ்தான் எல்லையில்
நிரந்தரமாய்
போர் மேகம்
வடக்கெல்லை முழுவதும்
வருத்தும் குளிரில்
அணிவகுப்பு.
கடற்பகுதி முழுவதும்
கட்டுப் பாடற்ற
சூரையாடல்.
ஆன்லைனில்
அதிபர் ஒபாமாவுடன்
அந்தரங்க உரையாடல்
முண்டங்களுக்கு
முழுநேரப் பணி
அரசியல்.
அண்டை சீனாவின்
அத்துமீறல்.
வங்கதேச எல்லையில்
வழியற்ற மக்களின்
ஊடுறுவல்.
வடகிழக் கெங்கிலும்
வந்தேரிகளின்
அட்டகாசம்
பாகிஸ்தான் எல்லையில்
நிரந்தரமாய்
போர் மேகம்
வடக்கெல்லை முழுவதும்
வருத்தும் குளிரில்
அணிவகுப்பு.
கடற்பகுதி முழுவதும்
கட்டுப் பாடற்ற
சூரையாடல்.
ஆன்லைனில்
அதிபர் ஒபாமாவுடன்
அந்தரங்க உரையாடல்
முண்டங்களுக்கு
முழுநேரப் பணி
அரசியல்.
Tuesday, December 1, 2009
நிர்மூலம்
முன்பு
செப்டம்பர் 11 பாரதி
டிசம்பர் 6 அம்பேத்கர்
ஆனால்
இப்போதோ
நம் நினைவுகளை நிர்மூலமாக்கி
இரட்டைக் கோபுரமும்
பாபர் மசூதியும்
செப்டம்பர் 11 பாரதி
டிசம்பர் 6 அம்பேத்கர்
ஆனால்
இப்போதோ
நம் நினைவுகளை நிர்மூலமாக்கி
இரட்டைக் கோபுரமும்
பாபர் மசூதியும்
Monday, November 23, 2009
கொதிக்கும் பூமி
பசுமை இல்ல வாயுக்கள்
பல்கிப் பெருகிக் கூடுவதும்
பசுமைக் காட்டை அழித்தலும்
பல்வேதிக் கழிவுகள் பெருகுவதும்
மினசார ஆலைக் கழிவுகளும்
மிகுந்தே பூமி சூடாச்சு
எண்ணிப் பாருங்கள் உலகீரே
எத்தணை அழிவுகள் இதனாலே
ஆழி நீர்மட்டம் உயர்ந்திடும்
அலைசார் நகரங்கள் மூழ்கிடும்
வெள்ளிப் பனிமலை உருகிடும்
வெள்ளத்தால் அழிவுகள் பெருகிடும்
வறட்சியில் நிலங்கள் பிளந்திடும்
வறுமை ஒன்றே மிஞ்சிடும் -வல்
அரசும் மக்களும் உணர்ந்தாலே
அபாயம் பூமிக்கு அகன்றிடும்
கடலுக்குள்ளே மாநாடு
கவன ஈர்ப்புத் தீர்மானம்
பனிமலைகள் மேலே மாநாடு
மக்கள் விழிக்கக் கூப்பாடு
உலகை மிரட்டி அரசோச்சும்
உயரிய வசதிகள் அனுபவிக்கும்
வளர்ந்த நாடுகள் உணரட்டும்
வசதிகள் குறைத்து வாழட்டும்
பல்கிப் பெருகிக் கூடுவதும்
பசுமைக் காட்டை அழித்தலும்
பல்வேதிக் கழிவுகள் பெருகுவதும்
மினசார ஆலைக் கழிவுகளும்
மிகுந்தே பூமி சூடாச்சு
எண்ணிப் பாருங்கள் உலகீரே
எத்தணை அழிவுகள் இதனாலே
ஆழி நீர்மட்டம் உயர்ந்திடும்
அலைசார் நகரங்கள் மூழ்கிடும்
வெள்ளிப் பனிமலை உருகிடும்
வெள்ளத்தால் அழிவுகள் பெருகிடும்
வறட்சியில் நிலங்கள் பிளந்திடும்
வறுமை ஒன்றே மிஞ்சிடும் -வல்
அரசும் மக்களும் உணர்ந்தாலே
அபாயம் பூமிக்கு அகன்றிடும்
கடலுக்குள்ளே மாநாடு
கவன ஈர்ப்புத் தீர்மானம்
பனிமலைகள் மேலே மாநாடு
மக்கள் விழிக்கக் கூப்பாடு
உலகை மிரட்டி அரசோச்சும்
உயரிய வசதிகள் அனுபவிக்கும்
வளர்ந்த நாடுகள் உணரட்டும்
வசதிகள் குறைத்து வாழட்டும்
Monday, October 26, 2009
உழை
உடை
அழைப்பு மணி
Thursday, October 8, 2009
பள்ளி
குருவி

காகத்திடம் அடிபட்டு
வந்தது ஒரு சிறு குருவி.
அதற்கு இணைத் தேடி
சேர்த்தோம்.
கூடவே
இன்னும் இரண்டு குருவிகள்
சேர்ந்து கொண்டன.
ஒரு நாள் காலை
அனைத்து குருவிகளின்
கால்களிலும் குருதி.
விளங்கவில்லை காரணம்.
குழந்தை மிகவும் வருந்தினாள்.
இரண்டு நாள் கழித்து
ஒரு குருவி
இறந்து போனது.
மனது வலித்தது.
குழந்தை யாழினி
சொல்லிக்கொண்டே இருந்தாள்.
கூட்டுக்குள் அடைப்பதை
விரும்பாத எனக்கு
குற்ற உணர்வு.
Friday, September 4, 2009
அழுகை
ஒருத்தன் செத்தா நாடழுது
வருத்தப் பட்டு வாய் பிளக்குது
கருத்துச் சொல்லி கவலைப் படுது
திருந்துவாயா தமிழா?-இனிமேல்
வருந்துவாயா தமிழா?
விபத்துல செத்தாக் கூட
அபத்தமாக பழியைப் போட்டு
இந்தியாவே அழுது புலம்புது
சிந்திக்க மறந்தாயே தமிழா?-இப்படி
எந்திரமாய் ஆனாயே தமிழா
தமிழ்நாட்டுத் தலைவரெல்லாம்
தமிழ்மக்கள் கொலை மறந்து
தம்கட்சி கொடி இறக்கி அழுதார்
தாங்கியே பார்த்தாயே தமிழா-ஏன்
ஓங்கி நீ எதிர்க்கவில்லை தமிழா?
எந்தயினம் செத்தாலும்
இந்தியனாய் நீயழுவாய்
உந்தன் இனம் செத்தபோது -ஒப்புக்கும்
ஒருநாய் கூட அழவில்லை தமிழா
உணராமல் போனாயே தமிழா
கொத்துக் கொத்தாச் செத்தாலும்
கொலை கொலையாய் சாஞ்சாலும்
ஒத்துக்க மாட்டானே உயிராய்-உன்னை
எத்திடுவான் இந்தியன் மயிராய்-நீயும்
எப்போது புரிந்திடுவாய் தமிழா?
ஓனத்துக்கு விடுப்பளிப்பான்
ஓர்தேசக் கதையளப்பான்
ஆனமட்டும் நமக்கெதிராய்
ஆட்சி செய்யும் தலைவர்களை
அடையாளம் கண்டிடுவாய் தமிழா?
நாடு போற போக்குள
நம்ம போக்கு நல்லா இல்ல
வீடு சொத்து போதுமே தமிழா
ஆடு மாடா இல்லாம
ஆறு அறிவை பயன்படுத்து தமிழா
Tuesday, September 1, 2009
பாரதம்

ஏ பாரதமே
உன்னைச் சுற்றிய
சிறிய நாடுகளை
மேலாதிக்கம் செய்யவே
ஓடிச் சென்று உதவிடுவாய்.
அறிந்த அவைகளும்
அச்ச உணர்வோடு
பெற்றுக்கொண்டு எட்டி நிற்கும்.
இப்படித்தான்
இலங்கைக்கும்
அழையா விருந்தாளியாய்
அள்ளிக்கொடுத்தாய் ஆயுதங்களை.
அமெரிக்காவும் சீனாவும்
அமைத்திடும் படைத்தளம்
என்ற
அச்சமே எப்போதும்.
உன்
அச்சம் வீண் போகவில்லை
சீனாவின்
வணிக கடற்தளம்
படைத்தளமாவது
வெகுதொலைவிலில்லை
ஈழத் தமிழர்களை
ஈவிரக்கமில்லாமல் கொண்றவர்கள்
நீ
பகையெனக் கருதும்
பாகிஸ்தானோடும்
கை கோர்த்துக் கொண்டு
உன்
பாதுகாப்புக்கே வேட்டு வைக்க
தயாராகிறார்கள்.
ஈழப் படுகொலைக்கு
இந்தியாவே
என்றாவது ஒருநாள்
வரலாற்றில்
மன்னிப்புக் கோருவாய்
தமிழீழம்
தனிக் கொடி படையோடு
அதை சாதிக்கும்.
வல்லரசு கனவு
பகல் கனவு.
Wednesday, August 12, 2009
யாழினி
பாரதம்
தோழர்

அடம்பிடித்தேனும்
தேசியக் கொடியை
சட்டையில் குத்தி
ஊரெலாம் வலம் வந்த
என்
சக தோழனே
இப்போது
ஏன்
உன் கையில்
பச்சை அட்டைக்காக
பிச்சை பாத்திரம்

விடுதலை
விடுதலை நாள் என்ன
விடுமுறை நாளா?
எடு தலை என
பரங்கியரை எதிர்த்து
உயிர் நீத்த தியாகிகளின்
வீர வணக்க நாள்
விடுதலை நாள் என்ன
விடுமுறை நாளா?
எடு தலை என
பரங்கியரை எதிர்த்து
உயிர் நீத்த தியாகிகளின்
வீர வணக்க நாள்
Thursday, August 6, 2009
சுதந்திரம்

அடிமைத்தளை உடைக்க
ஆர்ப்பரித்து எழுந்த வீரம்
உரிமை அடைவதற்கே
ஊரெலாம் அலைக்கழிப்பு
சுதந்திரம் சுமையா?
சுயமான சிந்தனைக்கு தடையா?
இதமான இளந்தென்றல் காற்று
ஈகியர் எமக்களித்த
தாய்ப்பால் போற்று
Friday, April 24, 2009
பாடல்
கடைசித் தமிழனும் குண்டினில் மாண்டு
காடையர் களிப்பில் திளைத்திடும் நாளை
விடையாய் பார்க்க விரும்பிடும் தமிழா
உனையே காலம் உயிராய் விடாது
படையில் சேர்ந்து மாண்டிட வேண்டாம்
பாவம் பாரத்தும் அழுதிட வேண்டாம்
தடையாய் இராது தள்ளியே இருந்திடு
தனித்தமிழ் ஈழம் தானாய் மலரும்
காடையர் களிப்பில் திளைத்திடும் நாளை
விடையாய் பார்க்க விரும்பிடும் தமிழா
உனையே காலம் உயிராய் விடாது
படையில் சேர்ந்து மாண்டிட வேண்டாம்
பாவம் பாரத்தும் அழுதிட வேண்டாம்
தடையாய் இராது தள்ளியே இருந்திடு
தனித்தமிழ் ஈழம் தானாய் மலரும்
ஈழம்
நாதியற்ற இனமாக ஆகிடுமோ
நாளையிந்த இழிநிலையும் மாறிடுமோ
ஆதிமக்கள் அடிமைநிலை நீண்டிடுமோ
ஆண்டயினம் அழிந்தொழிந்து போயிடுமோ
போதிமரப் புத்தமதம் புரிந்திடுமா
போர்முனையில் அமைதிவர நடந்திடுமா
நீதிநெறி நிலைபெற்று நின்றிடுமா
நிம்மதியாய் வாழ்ந்திடவே முடிந்திடுமா
கைகட்டி நிற்கிறதே உலகநாடு
கரைபட்டு போனதுவே மனிதநேயம்
மைவித்தை செய்கிறதே பாரதமும்
மனசாட்சி இழந்ததுவே இலங்கையுமே
தையென்று குதிக்கிறதே சிங்களமும்
தலைவெட்டி சாய்க்கிறதே தம்மக்கள்
வையகமே வானகமே வன்கொடுமை
வாய்திறந்து மௌனியாக இருப்பதேனோ?
எம்மக்கள் சிந்தியரத் தம்யாவும்
எருவாக இன்னொருநாள் உருவாகும்
தம்மக்கள் தலையெடுத்த தருக்கர்தம்
தலையெழுத்தை தண்டணையால் முடிப்பார்கள்
சும்மாவே சொரனையின்றி சோம்பலாக
சுற்றிவர மாட்டாரே எம்மிளைஞர்
பம்மாத்து காட்டுவோரை படைகொண்டு
பாடையிலே ஏற்றியே ஓய்வார்கள்
நாளையிந்த இழிநிலையும் மாறிடுமோ
ஆதிமக்கள் அடிமைநிலை நீண்டிடுமோ
ஆண்டயினம் அழிந்தொழிந்து போயிடுமோ
போதிமரப் புத்தமதம் புரிந்திடுமா
போர்முனையில் அமைதிவர நடந்திடுமா
நீதிநெறி நிலைபெற்று நின்றிடுமா
நிம்மதியாய் வாழ்ந்திடவே முடிந்திடுமா
கைகட்டி நிற்கிறதே உலகநாடு
கரைபட்டு போனதுவே மனிதநேயம்
மைவித்தை செய்கிறதே பாரதமும்
மனசாட்சி இழந்ததுவே இலங்கையுமே
தையென்று குதிக்கிறதே சிங்களமும்
தலைவெட்டி சாய்க்கிறதே தம்மக்கள்
வையகமே வானகமே வன்கொடுமை
வாய்திறந்து மௌனியாக இருப்பதேனோ?
எம்மக்கள் சிந்தியரத் தம்யாவும்
எருவாக இன்னொருநாள் உருவாகும்
தம்மக்கள் தலையெடுத்த தருக்கர்தம்
தலையெழுத்தை தண்டணையால் முடிப்பார்கள்
சும்மாவே சொரனையின்றி சோம்பலாக
சுற்றிவர மாட்டாரே எம்மிளைஞர்
பம்மாத்து காட்டுவோரை படைகொண்டு
பாடையிலே ஏற்றியே ஓய்வார்கள்
Wednesday, April 8, 2009
வாக்குப்பெட்டி மட்டுந்தான் குறிக்கோளா
வண்டமிழர் பரம்பரையே நரியாடா
தூக்குமரம் ஈர்த்துன்னை கொல்லாதா
தூரத்து தேசத்தில் எறியாதா
கேக்குவெட்டி கொண்டாட்டம் ஒருகேடா
கேப்பையிலே நெய்வடிதல் அறிவாடா
சாக்குச்சொல்லி வாக்குகேட்கும் சதிகாரா
சாவும்மை முத்தமிட்டு சாய்க்காதா
நீக்குப்போக்கு மட்டுந்தான் வாழ்வாடா
நீமட்டும் வாழத்தான் நிலமாடா
கோக்குபெப்சி குடிக்கத்தான் குடலாடா
கோலிசோடா கலரழித்தாய் சுதேசியாடா
தேக்குமர உடலுனக்குத் தேவையாடா
தேடிநிதம் சோறுண்டாய் தேறுவாயா
பாக்குவைத்து படைக்கழைக்க வேணுமாடா
பண்டைவீரம் பேசுவதே பிழைப்பாடா
வாக்களிக்க வரிசைநிற்கும் என்தோழா
வாடிநிற்கும் ஈழமக்கள் நிலையறிவாய்
காக்கவரும் கட்சிக்கே வாக்களிப்பாய்
காடையரை இனங்கண்டு களையெடுப்பாய்
வண்டமிழர் பரம்பரையே நரியாடா
தூக்குமரம் ஈர்த்துன்னை கொல்லாதா
தூரத்து தேசத்தில் எறியாதா
கேக்குவெட்டி கொண்டாட்டம் ஒருகேடா
கேப்பையிலே நெய்வடிதல் அறிவாடா
சாக்குச்சொல்லி வாக்குகேட்கும் சதிகாரா
சாவும்மை முத்தமிட்டு சாய்க்காதா
நீக்குப்போக்கு மட்டுந்தான் வாழ்வாடா
நீமட்டும் வாழத்தான் நிலமாடா
கோக்குபெப்சி குடிக்கத்தான் குடலாடா
கோலிசோடா கலரழித்தாய் சுதேசியாடா
தேக்குமர உடலுனக்குத் தேவையாடா
தேடிநிதம் சோறுண்டாய் தேறுவாயா
பாக்குவைத்து படைக்கழைக்க வேணுமாடா
பண்டைவீரம் பேசுவதே பிழைப்பாடா
வாக்களிக்க வரிசைநிற்கும் என்தோழா
வாடிநிற்கும் ஈழமக்கள் நிலையறிவாய்
காக்கவரும் கட்சிக்கே வாக்களிப்பாய்
காடையரை இனங்கண்டு களையெடுப்பாய்
பக்தி
முன்பைவிடவும்
இப்போது
பக்தி முற்றியிருப்பதாய்
அனைவருமே அங்கலாய்க்கிறார்கள்.
கோவில்கள் பெருகிவிட்டன
கூட்டம் நிரம்பி வழிகிறது
புதுப்புது வழிபாடுகள்
புற்றீசலாய் படையெடுக்கின்றன
ஒரு நாளும்
மனிதன்
தன்
சுயத்தோடு செயல்படுவதில்லை.
வாஸ்த்து
எண்கணிதம்
சோதிடம் என
அனைத்தும்
அவன் மூளையை
மழுங்கடித்து மண்ணாக்க்குகின்றன.
புண்ணாக்கு போலவே
அவன்
பொழுதெலாம் கிடக்கின்றான்
தன்னால் முடியும்
என்பதையே
அவனால்
நம்பமுடியவில்லை.
எல்லாம் அவன் செயல்
என்றே
தன் சுயத்தை இழக்கிறான்.
முன் பிறவி
வினையென்றே
தன் வினையைத்
தள்ளிப்போடுகின்றான்.
ஏழைகளுக்கு இரங்காமல்
ஏழு ஜென்மத்துக்கும்
ஏழுமலையானுக்கும்
சொத்து சேர்க்கின்றான்.
கோவில்கள் கட்டி
கூட்டம் சேர்ந்ததும்
நல்ல விலைக்கு விற்று
நகர்ந்துச் செல்கிறான்
அடுத்த ஊரில்
அதைவிடப் பெரிய
கோவிலுக்கு அடிக்கல் நாட்ட.
மனிதன் மீது
அன்பு செலுத்தாமல்்
மதங்களின் மேல்
வெறிகொண்டு அலைகிறான்.
உயிரிரக்கம் ஒன்றே
உலகில் தேவை என்பதை
உணராத பக்தியால்
முக்தியடைந்தும் ஏது பயன்?
இப்போது
பக்தி முற்றியிருப்பதாய்
அனைவருமே அங்கலாய்க்கிறார்கள்.
கோவில்கள் பெருகிவிட்டன
கூட்டம் நிரம்பி வழிகிறது
புதுப்புது வழிபாடுகள்
புற்றீசலாய் படையெடுக்கின்றன
ஒரு நாளும்
மனிதன்
தன்
சுயத்தோடு செயல்படுவதில்லை.
வாஸ்த்து
எண்கணிதம்
சோதிடம் என
அனைத்தும்
அவன் மூளையை
மழுங்கடித்து மண்ணாக்க்குகின்றன.
புண்ணாக்கு போலவே
அவன்
பொழுதெலாம் கிடக்கின்றான்
தன்னால் முடியும்
என்பதையே
அவனால்
நம்பமுடியவில்லை.
எல்லாம் அவன் செயல்
என்றே
தன் சுயத்தை இழக்கிறான்.
முன் பிறவி
வினையென்றே
தன் வினையைத்
தள்ளிப்போடுகின்றான்.
ஏழைகளுக்கு இரங்காமல்
ஏழு ஜென்மத்துக்கும்
ஏழுமலையானுக்கும்
சொத்து சேர்க்கின்றான்.
கோவில்கள் கட்டி
கூட்டம் சேர்ந்ததும்
நல்ல விலைக்கு விற்று
நகர்ந்துச் செல்கிறான்
அடுத்த ஊரில்
அதைவிடப் பெரிய
கோவிலுக்கு அடிக்கல் நாட்ட.
மனிதன் மீது
அன்பு செலுத்தாமல்்
மதங்களின் மேல்
வெறிகொண்டு அலைகிறான்.
உயிரிரக்கம் ஒன்றே
உலகில் தேவை என்பதை
உணராத பக்தியால்
முக்தியடைந்தும் ஏது பயன்?
Tuesday, April 7, 2009
ஏன்
எதையோ எழுதத் துடிக்கிறேன்
என் பேனா என்னையும் அறியாமல்
என்
கை விரல்களின் துணையோடு
கண்டதையும் களமிறக்கிச் செல்கிறது
நான்
என்செய்வது
மூளையும் புலன்களும்
முட்டிக்கொள்ளாதவரை
நல்லபடிதான்
எல்லாம் நடக்கின்றன.
வெவ்வேறு திசைகளில்
எண்ணங்கள்
விரியும் வேளையில்
இவ்வாறு நடக்குமா
எனும்
கேள்விகளே
மிஞ்சுகின்றன.
என் பேனா என்னையும் அறியாமல்
என்
கை விரல்களின் துணையோடு
கண்டதையும் களமிறக்கிச் செல்கிறது
நான்
என்செய்வது
மூளையும் புலன்களும்
முட்டிக்கொள்ளாதவரை
நல்லபடிதான்
எல்லாம் நடக்கின்றன.
வெவ்வேறு திசைகளில்
எண்ணங்கள்
விரியும் வேளையில்
இவ்வாறு நடக்குமா
எனும்
கேள்விகளே
மிஞ்சுகின்றன.
தேர்தல்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அல்லது
இடையிலும் வரும்
நம்
அரசியல் வாதிகளின்
ஆசைக்கேற்ப
சனநாயகத்தின்
சாட்சியாய் நின்று
சந்தி சிரிக்கும் சர்க்கஸ்.
கொள்கைகளும் கோட்பாடுகளும்
கோவணாண்டிகளுக்கு மட்டுமே
குத்தகை.
பணநாயகத்தோடு
பந்தயத்தில்
நொண்டி மாடுகளாய்
சனநாயகவாதிகள்.
அலங்காரங்களுக்கும்
விளம்பரங்களுக்கும்
மத்தியில்
ஆட்பட்டு
செத்துமடியும் குடியரசு.
சாதியும் மதமும்
சரியாக அலசப்பட்டு
மக்களை மந்தைகளாகவே
பாதுகாக்க நடக்கும்
திருவிழா.
காய்ந்த தலையும்
கந்தை துணியும்
கை கூப்பித்
தொழப்படும் கனவுக் காலம்.
கருப்பு பணங்கள்
வெள்ளை மனங்களை
வெட்டிச் சாய்க்கும்
கருப்பு தினம்.
ஓடி ஓடி
உழைப்பவரை
உண்டு கொழுப்பவர்
வெண்று களித்திடும்
வெரிநாள்
கற்பனைகளையே
விற்பனை செய்யும்
கட்சிகளின் சந்தை
கவிதைக்கு
சொற்களைத் தேடினாலும்
போலிகளே முந்திவரும்
கலைக்களஞ்சியம்
அல்லது
இடையிலும் வரும்
நம்
அரசியல் வாதிகளின்
ஆசைக்கேற்ப
சனநாயகத்தின்
சாட்சியாய் நின்று
சந்தி சிரிக்கும் சர்க்கஸ்.
கொள்கைகளும் கோட்பாடுகளும்
கோவணாண்டிகளுக்கு மட்டுமே
குத்தகை.
பணநாயகத்தோடு
பந்தயத்தில்
நொண்டி மாடுகளாய்
சனநாயகவாதிகள்.
அலங்காரங்களுக்கும்
விளம்பரங்களுக்கும்
மத்தியில்
ஆட்பட்டு
செத்துமடியும் குடியரசு.
சாதியும் மதமும்
சரியாக அலசப்பட்டு
மக்களை மந்தைகளாகவே
பாதுகாக்க நடக்கும்
திருவிழா.
காய்ந்த தலையும்
கந்தை துணியும்
கை கூப்பித்
தொழப்படும் கனவுக் காலம்.
கருப்பு பணங்கள்
வெள்ளை மனங்களை
வெட்டிச் சாய்க்கும்
கருப்பு தினம்.
ஓடி ஓடி
உழைப்பவரை
உண்டு கொழுப்பவர்
வெண்று களித்திடும்
வெரிநாள்
கற்பனைகளையே
விற்பனை செய்யும்
கட்சிகளின் சந்தை
கவிதைக்கு
சொற்களைத் தேடினாலும்
போலிகளே முந்திவரும்
கலைக்களஞ்சியம்
Subscribe to:
Posts (Atom)