அழகுக்காப் பெண்களின் தேகம்
அன்றாடம் விளம்பரத்தில் மோகம்
ஆடவரின் உள்ளாடை
அனைத்தபடி நிற்கின்றார்
மெழுகாக விளம்பரத்தில் சோகம்

Sunday, January 3, 2010
Friday, January 1, 2010
தமிழா தமிழா
உலகம் முழுமையும் 2010 புத்தாண்டைக் கொண்டாடுகின்ற இந்த வேளையில் உலகத்தோடு ஒழுகும் தமிழர்களும் கொண்டாடுவது நல்லது.ஆனால் தொண்மையான ஒரு இனம் ,பழங்காலந்தொட்டே இலக்கிய வளமும் இலக்கண செழுமையும் கொண்ட ஒரு ஒப்பற்ற தாய்மொழியை உடைய ஒரு இனம்,தன் இனத்தின் -மொழியின் மேன்மையை அறியாமல் அந்நிய மொழியின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் மோகம் கொண்டு அலைவது தேவையா?நம்முடைய குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் இடுவதை மறந்துவிட்டோம்.பண்டைய பழக்க வழக்கங்களைத் தொலைத்துவிட்டோம்.இப்படி நமக்காண அடையாளங்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம்.எதனால் என்று யாராவது சிந்தித்தோமா?.பழம்பெருமைப் பேசுவதாக பலர் நினைக்கலாம்.ஆனால் பழமையை மறந்தவர்கள் வரலாற்றை மறந்தவர்களாகிறோம் என்பதை எத்தனை பேர் நினைக்கிறோம்.
சரித்திரத் தேர்ச்சி கொள் என்ற பாரதியின் வாக்கை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.சரித்திரம் பாடமாகப் படித்தால் மட்டும் ஆகாது.அதில் தேர்ச்சி இருந்தால் தான் ஒரு இனம் தன் விழுமியங்களை பாதுகாக்க முடியும் என்பது பாரதியின் வாக்கு.உலகலாவியப் பார்வை வேண்டும் அதே சமயத்தில் தன் மொழி ,இனம் ,மண் குறித்த அக்கறை ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் .அப்படி நினைக்கிற இனம் தான் தன் அடையாளங்களை இழக்காது அடுத்து வருகிற தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் .
ஆங்கிலப் புத்தாண்டை அமர்க்கலமாக்க் கொண்டாடிய உலகத் தமிழர்களே! அடுத்து தைத்திங்கள் முதல்நாள் நம் தமிழ்ப் புத்தாண்டு வருகிறது.இதைவிடவும் அதிக உற்சாகத்தோடு கிராமச் சமுதாயமாக்க் கொண்டாடியதுபோல் ஊரோடும் உறவோடும் கொண்டாடி மகிழ ஆயத்தமாகுங்கள்.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு எனபதை நிரூபிக்கும் வண்ணம் ,கொண்டாடி மகிழ கூடி வாருங்கள்.
தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்லுங்கள்.
தமிழ், தமிழர் பகைகளை வெல்லுங்கள்
சரித்திரத் தேர்ச்சி கொள் என்ற பாரதியின் வாக்கை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.சரித்திரம் பாடமாகப் படித்தால் மட்டும் ஆகாது.அதில் தேர்ச்சி இருந்தால் தான் ஒரு இனம் தன் விழுமியங்களை பாதுகாக்க முடியும் என்பது பாரதியின் வாக்கு.உலகலாவியப் பார்வை வேண்டும் அதே சமயத்தில் தன் மொழி ,இனம் ,மண் குறித்த அக்கறை ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் .அப்படி நினைக்கிற இனம் தான் தன் அடையாளங்களை இழக்காது அடுத்து வருகிற தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் .
ஆங்கிலப் புத்தாண்டை அமர்க்கலமாக்க் கொண்டாடிய உலகத் தமிழர்களே! அடுத்து தைத்திங்கள் முதல்நாள் நம் தமிழ்ப் புத்தாண்டு வருகிறது.இதைவிடவும் அதிக உற்சாகத்தோடு கிராமச் சமுதாயமாக்க் கொண்டாடியதுபோல் ஊரோடும் உறவோடும் கொண்டாடி மகிழ ஆயத்தமாகுங்கள்.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு எனபதை நிரூபிக்கும் வண்ணம் ,கொண்டாடி மகிழ கூடி வாருங்கள்.
தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்லுங்கள்.
தமிழ், தமிழர் பகைகளை வெல்லுங்கள்
Subscribe to:
Posts (Atom)